பச்சைப்புல் நிலப்பரப்புடன்
பசுமைகொண்டு வளர்ந்த ஊர்
இச்சை கொள்ளும் எழில் அழகுடன்
எங்கும் குளுமை எதிலும் புதுமை !
குலப்பிரிவுகள் கொண்டிருந்தாலும்
குறைவற்ற செல்வதோடு எங்கும்
நிலபுலன்கள் யாவும் நிறைய பெற்று
நேர்மையுடன் வாழும்மூர் !
புஞ்சை காணாத தஞ்சை மண்ணில்
புடம் போட்டுப் பொன்மெரு கேற்றிஎன்
நெஞ்சை நிமிர்த்தி நிறை மனத்துடன்
நேர்மையாக வாழவைத்த ஊர்!
சோழநாடு சோறுடைத்து _ அங்கு
வா ழ ஒரு வழிகிடைக்கும் நிலத்தை
ஆழ்உழுது அளவோடு பயிர் செய்தால்
பாழ் நிலத்தில் கூட பயிர்கள் வளரும்!
சலசலவென ஓடும் ஆற்றுநீர்
தரைபுரளக் கரையில் ஓர் ஆலமரம்
பலபல பறவைகள் பாடும் ஒலிகளைப்
பலநாட்கள் கேட்டாலும் பசியேயிராது!
Wednesday, December 26, 2012
Subscribe to:
Posts (Atom)