Wednesday, December 26, 2012

ஊர்

பச்சைப்புல் நிலப்பரப்புடன்
பசுமைகொண்டு வளர்ந்த ஊர்
இச்சை கொள்ளும் எழில் அழகுடன்
எங்கும் குளுமை எதிலும் புதுமை !

குலப்பிரிவுகள் கொண்டிருந்தாலும்
குறைவற்ற செல்வதோடு எங்கும்
நிலபுலன்கள் யாவும் நிறைய பெற்று
நேர்மையுடன் வாழும்மூர் !

புஞ்சை காணாத தஞ்சை மண்ணில்
புடம் போட்டுப் பொன்மெரு கேற்றிஎன்
நெஞ்சை நிமிர்த்தி நிறை மனத்துடன்
நேர்மையாக வாழவைத்த ஊர்!

 சோழநாடு சோறுடைத்து _ அங்கு
வா ழ ஒரு வழிகிடைக்கும் நிலத்தை
ஆழ்உழுது அளவோடு பயிர் செய்தால்
பாழ் நிலத்தில் கூட பயிர்கள் வளரும்!

சலசலவென ஓடும் ஆற்றுநீர்
தரைபுரளக் கரையில் ஓர் ஆலமரம்
பலபல பறவைகள் பாடும் ஒலிகளைப்
பலநாட்கள் கேட்டாலும் பசியேயிராது!