Thursday, October 15, 2009
Wednesday, October 14, 2009
விதி
காயம்
Tuesday, October 13, 2009
அன்புள்ள கடிதம்
Monday, October 12, 2009
பசுமை நிறைந்த நினைவுகளே
இந்தப் பாடல் மனதை பின்னோக்கி இழுத்துச் சென்றது. )
பசுமை நிறைந்த நினைவுகளே
படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலேஇரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே
வாழ்ந்து வந்தோமே
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
- என்றும்மயங்கி நிற்போமோ
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
நாம்பறந்து செல்கின்றோம்
Thursday, August 27, 2009
குறட்டை
மௌனத்தின் மொழி
Sunday, August 9, 2009
அன்புத் தோழி
Saturday, May 16, 2009
என் உயிரே
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு இருபது
ஆயாச்சு.
எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!
இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...
என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???
விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்க
எனக்குப் பிடிக்கலையே!!
சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!
உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!
ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!
பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!
காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??
பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!
என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???
( இதை என் தோழிக்காக ,அவள் விழியில் இருந்து வரும் கண்ணீர்க்காக)
Friday, May 15, 2009
Monday, May 11, 2009
உறவுகளில் மலர்களாக இருப்போம்
கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.
இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?
விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.
விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.
அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.
உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உற்வுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.
விதி
பிடிகொண்டு
பூத்து சிரிக்கும்
பூக்கள் எல்லாம்
காம்பை பிரித்தால்
கடவுளுக்கும்
கரைந்த உயிர்க்கும்
கருங் கூந்தலுக்கும்
கடுங் காற்றுக்கும்
கடும் வெயிலுக்கும்
வாடிப் போகும் என்பது
அதனதன் விதி
என்னுள்ளே .... என்னுள்ளே
பரிசளித்தாய் நீ
காதலென்னும் பிராணியை
நீயே கூட மறந்திருக்கலாம்..
நான் கனவுகளும் கற்பனைகளும்
ஊட்டி வளர்க்கிறேன் அதை
ஒரு விநாடி கூட........
அங்கு இங்கு நகராத
உன்மத்தம் பிடித்தது அது
எந்நேரமும்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கும்
செல்லக் கோபங்களையும்
அழகிய சிணுங்கல்களையும்
தொலை தூரத்தில்
தொலைத்து விட்டு வந்தாலும்
மீண்டும் வாசல் வந்து
மடிமேல் அமரும் அதை
கொஞ்சாமல் என்ன செய்வது?
நடு இரவுகளில்
நானாக உறக்கம் மறந்து
அதன் தலை கோதும் போதும்
பழி சுமத்திவிடுகிறேன்
அதுதான் கலைத்ததென
எனக்கிருக்கும் சிக்கல்
இறங்கி வைக்க இயலாத
வாழ்நாள் கர்ப்பம் இது
சுமை மாற்றிக் கொள்ளமுடியாது
உன்னிடம் கூட...........
வெற்றியின் ரகசியம்
நூறு அடி அடித்த பிறகே
பிளந்தது என்றால்,
நூறாவது அடிதான்
வலிமையானது
என்பதல்ல அர்த்தம்.
முந்தைய
ஒவ்வொரு அடியுமே
அந்த இறுதி அடிக்கு
இணையானது.
இதுதான் இறுதி அடி என்ற
நம்பிக்கையோடு அடிக்கப்பட்டது.
ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியைத் தொடப்போகும்
இறுதி முயற்சியாக எண்ணிப் போராடுவதே
வெற்றியின் ரகசியம் .
அன்புள்ள அம்மா
உலகம் முழுவதும் சுற்றி தெரிந்து கொண்டடேன்
உன்னைச் சுற்றித்தான் என் உலகம் என்பதை
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா
அம்மா
சுவசிக்கிறேன்
வாழ்த்துச் சொல்ல அவள் என்
வாழ்க்கையில் வந்தவள் அல்ல
வாழ்க்கையே தந்தவள் அவள்
அம்மா.
Sunday, May 10, 2009
Thursday, April 30, 2009
நரியின் சூழ்ச்சி
காக்கா என்று கத்தித்து
பறந்து சென்று பட்சண
கடை தனிலே ஒர் வடை.
கொளவிக் கொண்டு வாய்தனில்
களிப்பாய் சென்றது மரத்தின் மேல்
களிப்ப்புடன் தின்னவே
கண்டதே ஒர் நரி
சிநேகிதா, சிநேகிதா
ஷேமம் தானே என்றது
உன் பாட்டைக் கேட்கவே
விரைந்து வந்தேன் என்றது
காகம் பெருமை கொள்ளவே
காக்கா என்று கத்தித்து .
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்து சென்றது.
Wednesday, April 29, 2009
அன்பு
உயிர்
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உயிருள்ள வரை
_____________________________
Monday, April 27, 2009
முரண்பாடு
எதிரே வந்த கைம்பெண்
சகுனம் சரியில்லை என
வருத்தப்பட்டார் தன்
விதவை சகோதரியிடம்
வீட்டுப் பூனைக்கு
பாலூற்றியவாறு
இலையுதிர் முதிர்மரம்
கலந்து கமழ்கிறது --- மகனே
சோற்றுக்காக வெளிநாட்டு மண்உனைச்
சுமந்து திரிகிறது
வேற்று மண்ணில் வாழப் பழகி
வேர்கள் பரப்புகிறாய் --- பிடிச்
சோற்றில் அன்னியன் 'டாலர்' மினுக்கு
சுகங்கள் பழகிவிட்டாய்
கற்றுக் கொடுத்தேன்; கனவை வளர்த்தேன்
கற்பனை மெய்யாச்சு -- உன்னை
விற்றுவிட்டேனோ வெளிநாட்டிற்கு?
வெறுமை துனையாச்சு
வற்றிய இளமை, மிரட்டும் நோய்கள்,
வறுமை போதுமடா--- உன்னை
விற்றவள் கேட்கிறேன் மறுபடி வருகையில்
விடுதியில் சேர்த்திடடா--- உன்
கடனை தீர்த்திடடா
(என் பள்ளி்யில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் ஆதங்கம். கணவரை இழந்து தவிக்கும் அவர் தன் ஒரே மகனும் வெளிநாட்டில் இருப்பதால் தன்னுடைய ஆற்றாமயை வெளிப்படுத்திய விதம்)
நான் வாழ வேண்டும்
'நான் வாழ வேண்டும்
சாதித்துக் காட்ட வேண்டும்'
என்ற உந்துதல் மட்டுமே
Sunday, April 26, 2009
நட்பு
பார்த்து வியக்க
ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...
நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்....
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
இது அதனையும் நடக்கும் நல்ல நட்பு இருந்தால்
கனவுகள் நிஜமாவதில்லை !
நியாயங்கள் அழிவதில்லை !
நல்லவை கெடுவதில்லை !
அது போல
என் நட்பு என்றும் !
உன்னை விட்டு பிரிவதில்லை
உலகமே உயிர் உள்ள காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள் !
ஆனால்
நானோ உயிர் உள்ள உன் நட்பை சுவாசிக்கிறேன் ...!
தன்னம்பிக்கை
நிமிர்ந்து நிற்கும் மரம்
சிரிக்கும் செடி
வேடம்
எப்படி பொறுமையாயிருப்பது என்று தெரிந்தது.
நீ ஒரு மாணவி:
அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்
(நான் படிக்கும் பொழுது என் ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்)
என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்
நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.