Thursday, October 15, 2009

வாழ்த்து

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Wednesday, October 14, 2009

விதி

யாருக்கும் வெளிச் சூழ்நிலை எல்லாத் தருணங்களிலும் நூறு சத்விகிதம் விரும்பியபடி அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாதசூழ்நிலையை எதிர்த்து நின்றால் அமைதி கானாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும். மாறாக அதை உள்ளபடி ஏற்றுக் கொண்டு விட்டால் அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்க்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
ஆனால் விதி என்றால் எதையும் சகித்துக் கொண்டு செயலற்று இருப்பது என்று தவறாக புரிந்து கொண்டு உள்ளார்கள். எந்த சூழ்நிலையிலும் சகித்துக் கொள்ளக் கூடாது. சகித்துக் கொள்வது என்பது விருப்பத்தோடு செய்வது இல்லை.கட்டாயத்தால் செய்வது.
எனவே அதை விடுத்து எதையும் அமைதியாக ஏற்றுக் கொண்டு விதியை நமக்காகவே மாற்றிக் கொள்வது எப்படி என்று யோசித்து செயலாற்ற வேண்டும். நாம் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயமுறுத்தல்கள்ல் இருந்து முதலில் வெளியே வர வேண்டும்.
கடவுளே வந்து சொன்னாலும் நம் விதியை நாம்தான் தீர்மானிப்போம் என்கிற உறுதி நமக்கு வரவில்லை என்றால் நம் வாழ்க்கை அதன் போக்கில்தான் நடக்கும். விரும்பியதை அடைய வேண்டும் என்ற தீவிரம் நமக்கு இருந்தால் நம் விதியை கடவுளிடமிருந்து பறித்து நாம் கையாள முடியும்.



காயம்

இந்த உலகில்
அன்பானவர்கள்
பல காயங்களுக்கு
மருந்தாகிறார்கள்
ஆனால் நாம் அன்பு
செலுத்துபவர்கள்
நமக்கு தரும்
காயங்களுக்கு
மருந்தே இல்லை

Tuesday, October 13, 2009

அன்புள்ள கடிதம்

பெரும்பாலும் உரையாடல்களற்றே இருக்கும் அப்பா பெரியப்பாவின் அன்பை அவர்களுக்கிடையேயான பழைய கடிதங்களில் கண்டு கொண்டதாக
ஆனந்தப்பட்டு இருக்கிறாள் அம்மா....
ஆயிரம் மடல்கலோடு அழிந்த எழுத்துக்களோடு
பிரித்தாலே ஒடிந்து விழும் பொக்கிஷக் கடிதங்களை அப்படியே ஒப்பிக்கிறாள் எழுத படிக்க தெரியாத பாட்டி ...
நாம் நேசிக்கப்பட்டதை, வாழ்வை கொண்டாடிய நாட்களை, அடித்தல் திருத்தல்களுக்கிடையில் தெரியும் அன்பை நெகிழ வைக்கும்......
ஏதோ தேடுகையில் எங்கிருந்தோ தலைகாட்டும் பத்திரப்படுத்தப்ப்ட்ட பழங்கடிதங்கள்....
இப்போதைய மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் பல்லூடகக் குறுஞ்செய்தியிலும் கொஞ்சங் கூட தெரியவில்லை எழுத்துப் பிழையோடு இயைந்த பசுமையான அன்பின் வாசம்.....
துடிதுடிப்புடன் துரிதமாகவே எல்லாம் பழகிப் பழகி நெகிழ்வான நினைவுகளும் அன்பான எழுத்துக்களும் ஏங்கி, யாசித்து , நிற்கப் போகிறோம் பின்வரும் நாளில்.......
இதுதான் சௌகர்யம் என்ற நம் கற்பிதத்தாலோ.....
தவிர்க்க இயலாமலோ.....
கூட்டு குடும்பங்களைப் போல்
பல பாரம்பரிய விழாக்களைப் போல்
சத்தமில்லாமல் காலாவதியாக வருகின்றன நம் கடிதங்களும்......

Monday, October 12, 2009

பசுமை நிறைந்த நினைவுகளே

(சமீபத்தில் மயிலாடுதுறை சென்றிருந்த பொழுது வானொலியில் கேட்ட
இந்தப் பாடல் மனதை பின்னோக்கி இழுத்துச் சென்றது. )

பசுமை நிறைந்த நினைவுகளே
படம்: ரத்தத் திலகம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களேபறந்து செல்கின்றோம்
பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே
குயில்களைப் போலே இரவும் பகலும் கூவித் திரிந்தோமே
குயில்களைப் போலேஇரவும் பகலும் கூவித் திரிந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வரவில்லாமல் செலவுகள் செய்து மகிழ்ந்திருந்தோமே
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல் வாழ்ந்து வந்தோமே
நாமே
வாழ்ந்து வந்தோமே

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்

எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவோமோ
இல்லம் கண்டு பள்ளி கொண்டு மயங்கி நிற்போமோ
- என்றும்மயங்கி நிற்போமோ

பசுமை நிறைந்த நினைவுகளே பாடித்திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்
நாம்பறந்து செல்கின்றோம்

Thursday, August 27, 2009

குறட்டை

ஏன் உன்னைப் பார்தது
சிலருக்குச் சிரிப்பு
பலருக்கு முகச் சுழிப்பு
எதற்காக?
நீ என் நித்திரையின் சிரிப்பொலி
என் நிம்மதியின் எக்காளம்.

மௌனத்தின் மொழி

வெற்றியில் மௌனம் அடக்கம்
தோல்வியில் மௌனம் சாதனை
இன்பமான நேரங்களில் மௌனம் சம்மதம்
உண்மையானவர்கள் பிரியும் பொழுது மௌனம் துன்பம்
இறுதியில் மௌனம் மரணம்

Sunday, August 9, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் என்று
நிணைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் பாதியிலேயே போய்விட்டாயே
என் தோழி??????
(என்னை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த என் தோழிக்காக)

Saturday, May 16, 2009

உனக்குள்...


புரிந்து கொள்...

உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...

வெறுத்து விலகியபடி ஏன்...

உறவா பகையா நீ....

நெருங்க மறுக்கிறாய்...

குளிர்ந்த நிலவும் நீயாய்...

சுடும் சூரியனும் நீயாய்...

நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...

நொறுங்கி போகிறேன்...

சில சமயங்களில்...

என் உயிரே

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு இருபது
ஆயாச்சு.

எப்போ நீ பிறப்பே
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!

இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய்
எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் - உன்
வரவைச் சொல்லலையே...!!
வாடகைத்தாய் வாங்க
எனக்குப் பிடிக்கலையே!!

சோதனைக்குழாய் முறைக்கும் - முதல்
சோதனையிங்கு பணத்திலாமே??
சொச்ச ரொக்கமில்லையினா
சோதனைக்குழாயும் கிடைக்காதாமே??!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய் என்
உயிரே தவிக்குதிங்கே...!!
நஞ்சுரைக்கும் வல்லூறால் - என்
நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!

ஆண்டுபல போனாலும் - உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!
'ம்மா'-னு நீ சொல்ல தவமிருக்கும்
இந்த தரிசுத்தாய் நானாச்சு..!!

பேதையாகி பிதற்றுறேனே - உன்
பிஞ்சுமுகம் காணாமலே...!!
காலம் வந்து கனிந்துவிட்டால் - நீ
என்கண் முன்னாலே...!!

காத்திருந்து கருகினாலும் - உன்
நினைப்பு மட்டும் நித்தியமாய்...!!
பூத்திருக்கும் புதுப்பூவாய் - நீபிறக்க
இன்னும் எத்தனைநாள் சத்தியமாய்..??

பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா
சீர் சிலையே..!! - என்
வயிற்றில் வளரா
வளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???

( இதை என் தோழிக்காக ,அவள் விழியில் இருந்து வரும் கண்ணீர்க்காக)

Friday, May 15, 2009

அலைகள் ஒய்வதில்லை

cid:image001.jpg@01C9C59D.122790D0


cid:image002..jpg@01C9C59D.122790D0



cid:image003.jpg@01C9C59D.122790D0



cid:image004.jpg@01C9C59D.122790D0


cid:image005.jpg@01C9C59D.122790D0

cid:image007.jpg@01C9C59D.122790D0



cid:image008.jpg@01C9C59D.122790D0



cid:image009.jpg@01C9C59D.122790D0



cid:image010.jpg@01C9C59D.122790D0

Monday, May 11, 2009

உறவுகளில் மலர்களாக இருப்போம்

நாம் நம்மை அறியாமலேஎந்த நாளும் எந்த நேரமும் உறவுகளை ஏற்ப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறோம். உற்வு என்பது உணர்வால் உருவானது, உள்ளங்களின் சங்கமங்களினால் விளைவது. உற்வுகள் இல்லாமல் வீடு இல்லை, நாடு இல்லை, உலகம் இல்லை. உறவு என்றால் இன்ப துன்பங்களை பகிர்ந்து கொள்வது, ஒருவொருக்கொருவர் அன்பு செலுத்துவது், துயர் துடைப்பது,உற்சாகத்தை தூண்டுவது், தவறைக் கண்டிப்பது,உயர்வில் ஊக்கம் காட்டி மகிழ்வதாகும்.

கால்களால் அடியெடுத்து நடக்கும்போது மண்ணுடன் உறவு உண்டாகிறது. நீச்சலடிக்கும் போது நீருடன் உறவு ஏற்படுகிறது.இரவில் அண்ணாந்து பார்க்கும் போது கண்சிமிட்டும் விண்மீண்களுடன் உறவு ஏற்பட்டு விடுகிறது.

இயற்கையுடன் உறவாடுவது இத்தனை எளிதாக இருக்கும் போது, மனிதர்களுடன் ஏற்படுத்திக் கொள்ளும் உற்வுகள் மட்டும் கசந்து போவது ஏன்?

விதைகளாக இருக்கும் வரை தாவரங்களால் ஒன்றோடொன்று உறவாட முடிவதில்லை. அது மலர்களாக பூக்கும் பொழுதுதான் வண்டுகளை ஈர்த்து அதன் மூலம் பிற மலர்களுடன் தொடர்பு கொண்டு காய்ந்து கனிந்து பல்கி பெருக முடிகிறது.

விதைகள் மூடி இருக்கின்றன? மலர்கள் திறந்து இருக்கின்றன. உறவுகள் ஏற்படுவதற்கும் ஏற்படாமலேயே போய் விடுவதற்க்கும் காரணம் இதுதான்.

அதனால் நாம் நம்முடைய மனதை மலர்களைப் போல் திறந்து வைத்துக் கொள்வோம். விதைகளைப் போல இறுக்கமாக மூடவேண்டாம்.

உறவுகள் மேம்பட அன்பு ஒன்றுதான் வழி. ஆகவே உலகமானாலும், உடலானாலும், வாழ்க்கையானாலும் உற்வுகள்தான் வாழ்க்கையின் அடிப்படை.

விதி

செடி ஒன்றில்
பிடிகொண்டு
பூத்து சிரிக்கும்
பூக்கள் எல்லாம்
காம்பை பிரித்தால்
கடவுளுக்கும்
கரைந்த உயிர்க்கும்
கருங் கூந்தலுக்கும்
கடுங் காற்றுக்கும்
கடும் வெயிலுக்கும்
வாடிப் போகும் என்பது
அதனதன் விதி

என்னுள்ளே .... என்னுள்ளே

ஒரு கோடையில்
பரிசளித்தாய் நீ
காதலென்னும் பிராணியை

நீயே கூட மறந்திருக்கலாம்..
நான் கனவுகளும் கற்பனைகளும்
ஊட்டி வளர்க்கிறேன் அதை

ஒரு விநாடி கூட........
அங்கு இங்கு நகராத
உன்மத்தம் பிடித்தது அது
எந்நேரமும்
கழுத்தைக் கட்டிக்கொண்டு
இறங்க மறுக்கும்

செல்லக் கோபங்களையும்
அழகிய சிணுங்கல்களையும்
அதிகம் உடையது அது......

தொலை தூரத்தில்
தொலைத்து விட்டு வந்தாலும்
மீண்டும் வாசல் வந்து
மடிமேல் அமரும் அதை
கொஞ்சாமல் என்ன செய்வது?

நடு இரவுகளில்
நானாக உறக்கம் மறந்து
அதன் தலை கோதும் போதும்
பழி சுமத்திவிடுகிறேன்
அதுதான் கலைத்ததென

வளர்ப்பதே தெரியாமல்
மூடி மறைப்பதுதான்
எனக்கிருக்கும் சிக்கல்

இறங்கி வைக்க இயலாத
வாழ்நாள் கர்ப்பம் இது
சுமை மாற்றிக் கொள்ளமுடியாது
உன்னிடம் கூட...........


வெற்றியின் ரகசியம்

ஒரு பாறை
நூறு அடி அடித்த பிறகே
பிளந்தது என்றால்,
நூறாவது அடிதான்
வலிமையானது
என்பதல்ல அர்த்தம்.
முந்தைய
ஒவ்வொரு அடியுமே
அந்த இறுதி அடிக்கு
இணையானது.
இதுதான் இறுதி அடி என்ற
நம்பிக்கையோடு அடிக்கப்பட்டது.
ஒவ்வொரு முயற்சியும்
வெற்றியைத் தொடப்போகும்
இறுதி முயற்சியாக எண்ணிப் போராடுவதே
வெற்றியின் ரகசியம் .

அன்புள்ள அம்மா

அன்புள்ள அம்மா
உலகம் முழுவதும் சுற்றி தெரிந்து கொண்டடேன்
உன்னைச் சுற்றித்தான் என் உலகம் என்பதை
---------------------------------------------------------------
என்க்கு சுவாசம் தந்தவளைப் பற்றி
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா

அம்மா

அவளை நான் நேசிக்கவில்லை
சுவசிக்கிறேன்
வாழ்த்துச் சொல்ல அவள் என்
வாழ்க்கையில் வந்தவள் அல்ல
வாழ்க்கையே தந்தவள் அவள்
அம்மா.

Sunday, May 10, 2009

அம்மா என் சுவாசம்




என்னுடைய அம்மாவிற்க்கும்,உலகில் உள்ள அத்தனை தாய்மார்களுக்கும் எனது
அன்னையர் தின வாழ்த்துக்கள்.








Thursday, April 30, 2009

நரியின் சூழ்ச்சி

காகம் ஒன்று வந்தது.
காக்கா என்று கத்தித்து
பறந்து சென்று பட்சண
கடை தனிலே ஒர் வடை.

கொளவிக் கொண்டு வாய்தனில்
களிப்பாய் சென்றது மரத்தின் மேல்
களிப்ப்புடன் தின்னவே
கண்டதே ஒர் நரி

சிநேகிதா, சிநேகிதா
ஷேமம் தானே என்றது
உன் பாட்டைக் கேட்கவே
விரைந்து வந்தேன் என்றது

காகம் பெருமை கொள்ளவே
காக்கா என்று கத்தித்து .
வடையும் கீழே விழுந்தது
நரியும் எடுத்து சென்றது.

Wednesday, April 29, 2009

அன்பு

அன்புங்கிறது ஒரு தியானம் மாதிரி. அன்பு செலுத்துவதை விட ஒரு பெரிய தியானம் வேறெதுவாகவும் இருக்க முடியாது,அந்த தியானத்தை மட்டும் வாழ்க்கையில் பழகிட்டோம் என்றால் அதிலிருந்து விடுபட முடியாது. அதைத் தவிர வேறு எதுவுமே பெரிய விஷயமா தெரியவே தெரியாது. அதனால் அன்பு என்னும் சொத்தை நம்மிடையே தக்க வைத்து கொள்வோம்.

உயிர்

பூக்கள் என்பது
உதிரும் வரை
இரவு என்பது
விடியும் வரை
உறவு என்பது
பேசும் வரை
பிரிவு என்பது
இணையும் வரை
நட்பு என்பது
உயிருள்ள வரை

_____________________________

Monday, April 27, 2009

முரண்பாடு

குறுக்கே சென்ற பூனை
எதிரே வந்த கைம்பெண்
சகுனம் சரியில்லை என
வருத்தப்பட்டார் தன்
விதவை சகோதரியிடம்
வீட்டுப் பூனைக்கு
பாலூற்றியவாறு

இலையுதிர் முதிர்மரம்

காற்றில் உந்தன் வாசம் இன்னும்
கலந்து கமழ்கிறது --- மகனே
சோற்றுக்காக வெளிநாட்டு மண்உனைச்
சுமந்து திரிகிறது
வேற்று மண்ணில் வாழப் பழகி
வேர்கள் பரப்புகிறாய் --- பிடிச்
சோற்றில் அன்னியன் 'டாலர்' மினுக்கு
சுகங்கள் பழகிவிட்டாய்
கற்றுக் கொடுத்தேன்; கனவை வளர்த்தேன்
கற்பனை மெய்யாச்சு -- உன்னை
விற்றுவிட்டேனோ வெளிநாட்டிற்கு?
வெறுமை துனையாச்சு
வற்றிய இளமை, மிரட்டும் நோய்கள்,
வறுமை போதுமடா--- உன்னை
விற்றவள் கேட்கிறேன் மறுபடி வருகையில்
விடுதியில் சேர்த்திடடா--- உன்
கடனை தீர்த்திடடா
(என் பள்ளி்யில் பணியாற்றும் ஒரு ஆசிரியரின் ஆதங்கம். கணவரை இழந்து தவிக்கும் அவர் தன் ஒரே மகனும் வெளிநாட்டில் இருப்பதால் தன்னுடைய ஆற்றாமயை வெளிப்படுத்திய விதம்)

நான் வாழ வேண்டும்

இந்த உலகம்வாய்ப்புகளால் சூழப்பட்டது .இங்கே யாரும் கண்ணீர் விட்டு கரைந்து போக அவசியமில்லை. போராடத் துணிந்த எவருக்கும் பிரகாசமான எதிர்காலம் படைக்கப்பட்டு இருக்கிறது. தகுதியுள்ள எவருக்கும் உத்விக்கு நீள்வதற்கு கரங்கள் ஆயிரம் காத்திருக்கின்ற்ன. அத்தனைக்கும் தேவை,
'நான் வாழ வேண்டும்
சாதித்துக் காட்ட வேண்டும்'
என்ற உந்துதல் மட்டுமே

Sunday, April 26, 2009

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்....
ஒரே கூரையின்கீழ் பல்லாண்டுகளாக வாழ்ந்து, பல்வேறு விஷயங்களைப் பேசியவாறு இருப்பினும் - இருவரது இதயங்களும் சந்தித்துக் கொள்ளமால் இருக்கலாம்! முதல் சந்திப்பில், முதல் உரையாடலிலேயே நீண்ட கால நண்பர்கள் என்ற உணர்வையும் பெறலாம் - மேரி கேதர்வுட்

மூன்று எழுத்தில்:
எல்லோரிடமும் அன்பை காட்டி ஏமாந்து விடாதே
யாரிடமும் அன்பை காட்டி ஏமாற்றி விடாதே
தோல்வி எனக்கு பிடிக்கும் தோற்பது உன்னிடம் என்றால்
கோபம் எனக்கு பிடிக்கும் கோபிப்பது நீ என்றால்
அழுகை எனக்கு பிடிக்கும் ஆறுதல் சொல்ல நீ இருந்தால்
இது அதனையும் நடக்கும் நல்ல நட்பு இருந்தால்

உன் கையே உன்னை:
கனவுகள் நிஜமாவதில்லை !
நியாயங்கள் அழிவதில்லை !
நல்லவை கெடுவதில்லை !
அது போல
என் நட்பு என்றும் !
உன்னை விட்டு பிரிவதில்லை
உலகமே உயிர் உள்ள காற்றைத்தான் சுவாசிக்கிறார்கள் !
ஆனால்
நானோ உயிர் உள்ள உன் நட்பை சுவாசிக்கிறேன் ...!

தன்னம்பிக்கை



உதிர்ந்து விட்ட இலைகளை
நினைத்து தளராமல்
நிமிர்ந்து நிற்கும் மரம்

பூக்களைப் பறித்த பின்னும் கூட
சிரிக்கும் செடி
மேகந்தனை மழையாக சொரிந்த பின்பும்
தெளிந்து நிற்க்கும் வானம்
எப்படி ஆட்டினாலும்
விழாமல் நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
கூட்டை விட்டு வெளியேறினாலும்
பதட்டமின்றி பறக்கும்
குஞ்சுப் பறவைகள்
முழுசாக கரைந்து போன பின்பும்
மீண்டும்
உருவாகி ஒளிரும் பொளர்ணமி
எல்லாம் சொல்லித் தந்தன
எதிலும் உடையாமல்
தன்னம்பிக்கையைம் வாழும் வித்தையையும்

வேடம்


கடலைப் பார்த்தேன்
எப்படி போராடுவது என்று தெரிந்தது.
பூமியைப் பார்த்தேன்
எப்படி பொறுமையாயிருப்பது என்று தெரிந்தது.
அருவியைப் பார்த்தேன்
சுறு சுறுப்பின் அர்த்தம் தெரிந்தது.
மனிதனைப் பார்த்தேன்
எப்படி வேடம் போடுவது என்று தெரிந்தது
பெண்

நீ ஒரு மாணவி:

அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்

(நான் படிக்கும் பொழுது என் ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்)

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்
நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.