Saturday, March 5, 2011

களங்கமற்ற அணுகுமுறை

நடைமுறை வாழ்வில் மனித மூளையானது தாவி தாவி போனாலும் எதையும் புரிந்துகொண்டு விடும் ஆற்றல் கொண்டது . ஆனால் மனித மனம் உணர்வுபூர்வமானது . தாவி தாவி போனால் யாரையும் புரிந்து கொள்ளாது தவிக்கும். வ்வொரு நிகழ்ச்சியையும் ஒவ்வொரு செயலையும் எழுத்து கூட்டி
படிக்க ஆரம்பித்தால் கற்பனை தறிகெட்டு ஒடி நிறைய உறவுகள் சிக்கல் நூல்கண்டுகலாகிவிடும். என்னுடையவர்கள் என்பதை முதல் எழுத்தாகவும் நல்லவர்கள் என்பதை கடைசி எழுத்தாகவும் மட்டும் புரிந்து கொண்டு விட்டால் நடுவே எப்படிப்பட்ட குழப்ப சம்பவங்கள் நடந்தாலும் அந்த அடிப்படை அன்பு மாறாமலிருக்கும்.கணவன் முதல் அலுவலக ப்யூன் வரை நாம் தினமும் சந்திக்கும் எல்லா முகங்களுக்கும் உறவுகளுக்கும் இந்த முதல் _ கடைசி எழுத்து பார்மலா பொருந்தும் .
வேண்டியதெல்லாம் களங்கமற்ற அணுகுமுறைதான் .........

0 comments: