Friday, January 11, 2013

மொழி
ஆற்றல் அறிவு அத்தனையும்
அடங்கியு ள்ள தமிழ் மொழியில்
போற்றிப் புகழ்ந்திட ஒரு பாட்டு
போதுமய்யா தமிழ்மெட்டில்!
கூற்றுத் தமிழ்ப்பாட்டுக்கூடக்
கோடிகணக்கில் மறைஞ்சுபோச்சு!
ஆற்றுவெள்ளம் கரைபுரள
அணைகள் கட்டி தடுத்துவிட்டோம் !
இடைச் செருகல் எத்தனையோ
எங்கள் தமிழில் புகுந்ததினால்
நடைமுறையில் வழங்கும் பேச்சு
நாளுக்கு நாள் மறையுதய்யா !
எத்தனையோ தமிழ்பாக்கள்
ஏட்டிலிருந்தும் மறைஞ்சு போச்சு !
மொத்தமாக மறையுமுன் பெரு
முயற்சியில் சில கிடைக்கலாச்சு !
உன்மொழி உனக்கு உயர்வானதே
ஊருக்காக நடனமாடாதே
தன்வழியில் தவறாமல் இரு அதில்
தரம் கெட்டுப்போய் விடாதே !
வேற்றுமொழிப் பாட்டைக்கூட
விருப்பமுடன் கேட்கவேண்டாம் !!!!!
காற்றில் மிதக்கும் தமிழ்ப்பாட்டை
காது கொடுத்துக் கேட்கவேண்டும் !
வேற்றுமொழி பாட்டைக் கேட்டு
மற்றவரைப் பொருள் கேட்போம்
ஏற்றுக்கொண்ட தமிழ்ப்பாட்டை
எந்நாளும் மதிப்பதில்லை !
துக்கடா தமிழ்ப்பாட்டு என்று
தொலைவில் அதை வைத்து விட்டோம்
மக்களும் மறுத்துப் பேசி
மற்றவர்க்கும் சொல்லவில்லை !!

1 comments:

said...

உள்ளதை உரைத்த விதம் நன்று.