Monday, May 11, 2009

விதி

செடி ஒன்றில்
பிடிகொண்டு
பூத்து சிரிக்கும்
பூக்கள் எல்லாம்
காம்பை பிரித்தால்
கடவுளுக்கும்
கரைந்த உயிர்க்கும்
கருங் கூந்தலுக்கும்
கடுங் காற்றுக்கும்
கடும் வெயிலுக்கும்
வாடிப் போகும் என்பது
அதனதன் விதி

0 comments: