Sunday, August 9, 2009

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் என்று
நிணைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் பாதியிலேயே போய்விட்டாயே
என் தோழி??????
(என்னை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த என் தோழிக்காக)

3 comments:

said...

யார் மாலா நம்மை விட்டு போனது மனது பத பதைக்குது:-((((((

said...

//வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !//

இது நிதர்சனம்! உங்கள் நட்பிடம் மட்டுமில்லை உண்மையான நட்பில் உள்ள அனைவரிடமும் :)

said...

//ஆனால் பாதியிலேயே போய்விட்டாயேஎன் தோழி??????(என்னை விட்டுப் பிரிந்த என் தோழிக்காக)//

பிரிந்தாலும் கூட கூடிய சீக்கிரம் சந்திக்கும் வாய்ப்பும் நிறைய பேசி இனித்திருக்கப்போகும் தருணமும் வரும்! நம்பிக்கையோடு இருங்கள் :)