Sunday, March 14, 2010

புதுப்பித்துக் கொள்வோம்

கையேந்தி யாசிக்காமல் பத்து ரூபாய் விற்க வந்த வயதான பாட்டியை புறகணித்து ரயில் பிடிக்க ஓடிய கணம் வாழ்க்கையில் நிரந்தர உறுத்தலயிற்று. கடமைக்காக பழகியவர்கள் திருமணம் சென்று வரிசையில் நின்று பரிசு கொடுத்து அவசரக் கதியில் அலுவலக நாற்காலியில் வந்து விழுகையில் மனம் அறிவித்தது வாழ்த்த மறந்த செய்தியை...........
இவை மட்டுமா ?????

கவிதை புத்தகம் வாசித்து மரம் சுற்றி உதிர்ந்த பூக்களை ரசித்து ஒரு மழை நாளை கொண்டாடியும் நாளாயிற்று.
என்ன செய்வது ????????

தவிர்க்க இயலா பணத் தேவைகளில் நம் ரசனைகளை பரபரப்புக்கு இரையாக்கி நேரங்களை காசாக்கிக் கொண்டிருக்கிறோம் நாம்.

அதிர்ஷ்ட வசமாக பிறிதொரு நாள் நேரம் கிடைத்தால் ..........புதிப்பித்து கொள்வோம் , நம் ரசனைகளை நல்லுணர்வுகளை ..............


1 comments:

said...

உலகமயமாக்கலின் விளைவுகளை இவ்வளவு சுருக்கமாக வேறுயாரால்தான் சொல்ல முடியும்? இப்படிக்கு ஆன்மீகக்கடல் வலைப்பூ