Friday, February 11, 2011

நாம் மனிதர்கள்

கை அசைந்தாலே
காற்றில் பறந்துவிட
நாம்
பயந்தாங்கொள்ளி காகம் அல்ல

ஆபத்தை அறிந்தால்
மணலுக்குள்
கொள்ள
முட்டாள் நெருப்பு கோழியுமல்ல

தொட்டாலே
சுருண்டு கொள்ள
பரிதாப மரவட்டையும் அல்ல

வருவது எதுவாயினும்
எதிர் கொள்ள வேண்டும்
உறுதியோடு நின்று
மகுடம் சூட வேண்டும் .
ஏனெனில்
"நாம் மனிதர்கள்"