Sunday, April 26, 2009

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்

என் பார்வையில் நட்புக்கு இலக்கணம்
நட்பு என்பது உச்சரிக்கும் சொல்லில் மட்டுமே உள்ளது அல்ல. அது இரு நபர்கள் பகிர்தலுடன், புரிதலும் கூடிய உண்மையான அன்பு. பயம் இல்லாத உறவாக நட்பை மட்டுமே கூறலாம். காரனம் நட்பின் அடிப்படையே சமத்துவம் தான். நட்பு என்பது ஒரு வலைப்பின்னல் போல. அதற்கு recharge, activation, roaming &singal எல்லாம் தேவையே இல்லை. நட்புக்கு மிக மிகத் தேவையான அம்சம் நம்முடைய மனதை மூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நட்பின் அடிபடையே அறிவை மட்டும்மல்ல, அறியாமையையும் பகிர்ந்து கொள்வதுதான். இருவருக்கும் ஒரு விஷயம் தெரியும் என்பதைப் போலவே இருவருக்கும் ஒரு வி்ஷயம் தெரியாது என்பது கூட நன்பர்களின் நெருக்கத்தை அதிகப்படுத்துகிறது. ஒருவருக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்வதும் தெரியாததை கேட்பதுமாக நட்பில் இருக்கும் பகிர்தல்தான் நட்பை மேலும் மேலும் வலுப்படுதிகிறது. பரசபர நம்பிக்கை இந்த நட்பின் அடிதளமாகிற்து் நட்ப்புக்கு மிகப் பெரிய பரிசு ஒன்று எனில் நம்முடைய வாழ்கையின் விலை மதிக்கமுடியாத காலத்தையே கொடுத்து விடு்கிரோம். அந்த காலம் திரும்பப் பெற இயலாது.

2 comments:

said...

உங்கள் பார்வையில் 'நட்பின் இலக்கணம்' இலக்கியமாகிறது. வெகு அருமையான விளக்கம்.

என் வாழ்த்துக்கள்.

Anonymous said...

Natpuku thagal tharum Ilakanam Arumai.