Sunday, April 26, 2009

நட்பு

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க
ஒரு நட்பு...

குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாட
ஒரு நட்பு...

காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற
ஒரு நட்பு...

வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்க
ஒரு நட்பு...

முதிர்ந்த பின்
அனுபவங்களைப்
பகிர்ந்து கொள்ள
ஒரு நட்பு...

நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...

தேவையின் போது
தோள்களில் சாய
நட்பு வேண்டும்...

துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க
நட்பு வேண்டும்...

மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ
நட்பு வேண்டும்...

நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்....

2 comments:

said...

நட்பின் தேவையை நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

//நானாக நானிருக்க
நட்பே...
நீ எனக்கு
நட்பாக வேண்டும்.... //

குறிப்பாக இவ்வரிகள் வெகு அருமை.

said...

வாப்பா மாலா வா!2 நாளா பின்னூட்டம் போட முடியாம கஷ்டப்படுத்திடுச்சு உன் டெம்பிளேட். பட படன்னு ஒரே நாள்ல 6 பதிவா. ஆகா அடுத்த கீதாம்மா, வல்லிம்மா, புதுகைதென்றல் ஆகியோருக்கு வாரிசு வந்தாச்சு!