Sunday, April 26, 2009

பெண்

நீ ஒரு மாணவி:

அன்பாய் இரு
அடிமையாய் இராதே
பாசமாய் இரு
பைத்தியமாய் இராதே
பொறுமையாய் இரு
மந்தமாய் இராதே
இரக்கம் காட்டு
ஏமாந்து போகாதே
அன்னம் போல் இரு
நல்லோரைத் தெரிந்து கொள்
பண்போடு பழகு
பாதகரை அறிந்து கொள்
கண்ணீர் தவறில்லை
ஆனால் அதில் மூழ்கி விடாதே
வேகம் அவசியம்தான்
ஆனால் விவேகத்தை மறக்காதே
வானம் தொட முயற்சி செய்
விழுந்தாலும் எழுந்து நில்
வேலிகளைத் தகர்த்தெறி
யாரும் காயப்படாமல் பார்த்துக் கொள்

(நான் படிக்கும் பொழுது என் ஆசிரியர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்)

1 comments:

said...

வருக வருக என் தோழியே! இனி பிச்சு உதறுப்பா!