Sunday, April 26, 2009

தன்னம்பிக்கை



உதிர்ந்து விட்ட இலைகளை
நினைத்து தளராமல்
நிமிர்ந்து நிற்கும் மரம்

பூக்களைப் பறித்த பின்னும் கூட
சிரிக்கும் செடி
மேகந்தனை மழையாக சொரிந்த பின்பும்
தெளிந்து நிற்க்கும் வானம்
எப்படி ஆட்டினாலும்
விழாமல் நிற்கும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
கூட்டை விட்டு வெளியேறினாலும்
பதட்டமின்றி பறக்கும்
குஞ்சுப் பறவைகள்
முழுசாக கரைந்து போன பின்பும்
மீண்டும்
உருவாகி ஒளிரும் பொளர்ணமி
எல்லாம் சொல்லித் தந்தன
எதிலும் உடையாமல்
தன்னம்பிக்கையைம் வாழும் வித்தையையும்

1 comments:

said...

அருமை.

//முழுசாக கரைந்து போன பின்பும்
மீண்டும்
உருவாகி ஒளிரும் பொளர்ணமி//

அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.